Posts

Showing posts from October, 2018

எதிர்நீச்சல் அடி!

தாய்ப்பால் போன்ற தமிழ்மொழியில் முதல் வணக்கம்! குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் போட்டது எதிர்நீச்சல்! ஏகாதிபத்தியத்தைத் தவிடுபொடியாக்கிய மாவீரன்  சே குவேரா போட்டது எதிர்நீச்சல்! ஆங்கிலேயனை எதிர்த்து மாண்ட ஜாலியன் வாலா பாக் மக்கள் போட்டது எதிர்நீச்சல்! சமூக நீதி சமநீதி பறைசாற்றிய பெரியாரும் அம்பேத்கரும் போட்டது எதிர்நீச்சல்! பள்ளிகள் பல திறந்து கல்விக்கண் திறந்த காமராசர் போட்டது எதிர்நீச்சல்! பெண்ணடிமைத்தனம் ஒழிக்க ஆசிரியர் ஆன சாவித்திரி பாய் பூலே போட்டது எதிர்நீச்சல்! அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற நெல்சன் மண்டேலா போட்டது எதிர்நீச்சல்! இயற்கை சீற்றங்கள் படையெடுப்புகள் பல தாண்டி வாழும் செம்மொழி தமிழ்மொழி போட்டது எதிர்நீச்சல்! தவழும் குழந்தை தடுமாறி எழுகையில் போட்டது எதிர்நீச்சல்! தடுமாறும் நாம் அனைவரும் தினந்தினம் போட வேண்டியது எதிர்நீச்சல்! வாடா மச்சான் அடித்து பார்க்கலாம் எதிர்நீச்சல்!

பொறியாளனே! துவண்டு போகாதே!

பொறியாளர் பெருமக்களுக்கு செம்மொழியாம் தமிழில் முதற்கண் வணக்கங்கள். முகநூலில் ஆங்காங்கே பொறியியல் படிப்பையும் பொறியியல் படித்தவர்களையும் ஏளனம் செய்வதைக் கண்டேன். பெரும்பாலானோர் ஏன் பொறியியல் படித்தோம் என்று எண்ணுகின்றனர். நான் வேலையில் கற்றுக் கொண்ட ஒன்றை மேற்கோள் இடுகிறேன். "நாம் அன்றாடம் செய்யும் வேலையை நம்மை விட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய பணியாளர்கள் பற்பல இருக்கின்றனர்" " ஒரு பொறியாளனின் தகுதி/ திறமையானது ஒரு வேலையை எந்த அளவு துரிதமாகவும் எந்த அளவு சிறப்பாகவும் எந்த அளவு பொருள், நேரம், பண சேமிப்புடன் செய்வதில் தான் இருக்கிறது" பொறியியல் எங்கே தான் இல்லை! நாம் தினமும் பயணிக்கும் வாகனங்களில் பொறியாளனின் உழைப்பு இருக்கிறது! நாம் வசிக்கும் வீட்டினை, வேலை பார்க்கும் அலுவலகத்தைச் சீரென அமைத்ததில் பொறியாளனின் கடமை இருக்கிறது! நாம் பயன்படுத்தும் கைப்பேசியில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் மென்பொருளும் பொறியாளனின் இலட்சியம் இருக்கிறது! வீடு முழுவதும் ஒளி பரப்ப மின்சார உற்பத்தியில் பணியாற்றும் பொறியாளனின் உழைப்பு நாட்டிற்கு உயிராய் இருக்கிறது! மருத்த...