பொறியாளனே! துவண்டு போகாதே!

பொறியாளர் பெருமக்களுக்கு செம்மொழியாம் தமிழில் முதற்கண் வணக்கங்கள்.

முகநூலில் ஆங்காங்கே பொறியியல் படிப்பையும் பொறியியல் படித்தவர்களையும் ஏளனம் செய்வதைக் கண்டேன். பெரும்பாலானோர் ஏன் பொறியியல் படித்தோம் என்று எண்ணுகின்றனர்.

நான் வேலையில் கற்றுக் கொண்ட ஒன்றை மேற்கோள் இடுகிறேன்.
"நாம் அன்றாடம் செய்யும் வேலையை நம்மை விட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய பணியாளர்கள் பற்பல இருக்கின்றனர்"
" ஒரு பொறியாளனின் தகுதி/ திறமையானது ஒரு வேலையை எந்த அளவு துரிதமாகவும் எந்த அளவு சிறப்பாகவும் எந்த அளவு பொருள், நேரம், பண சேமிப்புடன் செய்வதில் தான் இருக்கிறது"

பொறியியல் எங்கே தான் இல்லை!

நாம் தினமும் பயணிக்கும் வாகனங்களில் பொறியாளனின் உழைப்பு இருக்கிறது!

நாம் வசிக்கும் வீட்டினை, வேலை பார்க்கும் அலுவலகத்தைச் சீரென அமைத்ததில் பொறியாளனின் கடமை இருக்கிறது!

நாம் பயன்படுத்தும் கைப்பேசியில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் மென்பொருளும் பொறியாளனின் இலட்சியம் இருக்கிறது!

வீடு முழுவதும் ஒளி பரப்ப மின்சார உற்பத்தியில் பணியாற்றும் பொறியாளனின் உழைப்பு நாட்டிற்கு உயிராய் இருக்கிறது!

மருத்துவ துறையில் கூட உயிர்தொழில் நுட்பவியல் படித்த பொறியாளர்களின் பங்களிப்பு இருக்கிறது!

எங்கும் நிறைந்திருக்கும் பொறியியலைப் பற்றி அறிந்து கொள்ள பயின்று வேலை செய்து ஆழ்ந்த அனுபவம் பெற ஆவலாய் இரு!
ஏளனம் செய்பவர்களையும் மேலதிகாரியின் கடுமையான வார்த்தைகளையும் மனதில் ஏற்றாதே!

இரண்டு எழுத்து மந்திரச்சொல் "கேள்"
கேள்வி கேள்.
தவறுகளைத் திருத்திக் கொள்.
அனுபவம் பெறு.

நன்றி,
பொறியாளன் விக்னேஸ்வரன்.

Comments

  1. Awesome! Congratulations for the great writer in you!

    ReplyDelete
  2. Amazing rendition!! Grt wrk engineer cum writer vigneswaran

    ReplyDelete
    Replies
    1. நன்றி க்ருஷ்ணா!
      பாராட்டுக்கள் தான் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது!

      Delete
    2. உண்மை.Proud to be an Engineer.

      Delete
    3. நன்றி இணைப் பொறியாளனே!

      Delete
  3. Arumai..da..vaazhthukal..☺👏👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

தமிழாற்றுப்"படை"

எதிர்நீச்சல் அடி!